Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மாதம் தோறும் 50 ஆயிரம் ரிங்கிட் வரை லஞ்சம் பெற்று வந்த அமலாக்க அதிகாரிகள்: எஸ்பிஆர்எம் அம்பலம்
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மாதம் தோறும் 50 ஆயிரம் ரிங்கிட் வரை லஞ்சம் பெற்று வந்த அமலாக்க அதிகாரிகள்: எஸ்பிஆர்எம் அம்பலம்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.13-

நாட்டின் நுழைவாயில்களில் செட்டிங் முகப்பிடங்களை ஏற்படுத்தி, அந்நிய நாட்டவர்கள், மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய அனுமதிப்பதற்கு அமலாக்க அதிகாரிகள் மாதம் தோறும் சராசரி தலா 50 ஆயிரம் ரிங்கிட் வரை லஞ்சமாகப் பெற்று வந்துள்ளனர் என்று சந்தேகிக்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

மலேசியாவிற்குள் வெற்றிகரமாக நுழையும் ஒவ்வொரு அந்நிய நாட்டவரிடம் தலா 1,800 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரையில் இவர்கள் லஞ்சமாகப் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இவ்வாறு பெறப்பட்ட லஞ்சம், ரொக்கப் பணமாகவும், அவற்றைத் தங்கள் பினாமிகள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

தங்களின் கணக்குப்படி அந்நியப் பிரஜைகளை மலேசியாவிற்குள் நுழைய அனுமதிப்பது மூலம் ஒவ்வோர் அமலாக்க அதிகாரியும் மாதம் தோறும் 10 ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.

விமான நிலையத்தில் வந்திறங்கும் அந்நிய நாட்டவர்கள், எவ்வித சோதனை மற்றும் சிக்கலின்றி குடிநுழைவுத்துறையைத் தாண்டி செல்ல, எந்த முகப்பிடத்திற்கு, எந்த நேரத்தில் செல்ல வேண்டும், மற்றும் அந்நிய நாட்டவர்களின் கடப்பிதழ் எண் முதலிய விவரங்கள் முன்கூட்டியே ஏஜெண்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவரிடமும், செட்டிங் முகப்பிடத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தப்படுகிறது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

நாட்டின் பிரதான நுழைவாயில்களான விமான நிலையங்களில் மலேசிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சியின் ஒத்துழைப்புடன் எஸ்பிஆர்எம் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி இதனைத் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து