Jul 5, 2026
Thisaigal NewsYouTube
அடைப்பட்ட வடிகால்களைப் பார்வையிட்டார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

அடைப்பட்ட வடிகால்களைப் பார்வையிட்டார் மாமன்னர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

கோலாலம்பூர், புக்கிட் துங்குவில் உள்ள ஜாலான் கல்லாகெர் சுற்றுப்புறப் பகுதியின் தூய்மை நிலையை கண்டறிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று பார்வையிட்டார்.

இந்த திடீர் சோதனையின் போது சாலையோரங்களில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் வடிகால்களில் அடைப்பட்டு கிடக்கும் கழிவுப் பொருட்களையும் பார்வையிட்டு, அவை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை மாமன்னர் வலியுறுத்தியதாக சுல்தான் இப்ராஹிம் முகநூலில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதி சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிச் செய்ய ஊராட்சிமன்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

சாலையோரங்களில் குப்பைக் கொட்டுவது ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கம் செய்யும் இடமாக மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மாமன்னர் நினைவுறுத்தினார்.

அதே வேளையில் சாலையில் தொங்கும் பெரிய மரக் கிளைகளையும் மாமன்னர் கண்காணித்தார். இது பொதுமக்களுக்கு, குறிப்பாக இரவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மன்னர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது