Dec 5, 2025
Thisaigal NewsYouTube
அடைப்பட்ட வடிகால்களைப் பார்வையிட்டார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

அடைப்பட்ட வடிகால்களைப் பார்வையிட்டார் மாமன்னர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

கோலாலம்பூர், புக்கிட் துங்குவில் உள்ள ஜாலான் கல்லாகெர் சுற்றுப்புறப் பகுதியின் தூய்மை நிலையை கண்டறிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று சுமார் 3.2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று பார்வையிட்டார்.

இந்த திடீர் சோதனையின் போது சாலையோரங்களில் ஆங்காங்கு சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் வடிகால்களில் அடைப்பட்டு கிடக்கும் கழிவுப் பொருட்களையும் பார்வையிட்டு, அவை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை மாமன்னர் வலியுறுத்தியதாக சுல்தான் இப்ராஹிம் முகநூலில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதி சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிச் செய்ய ஊராட்சிமன்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.

சாலையோரங்களில் குப்பைக் கொட்டுவது ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கம் செய்யும் இடமாக மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மாமன்னர் நினைவுறுத்தினார்.

அதே வேளையில் சாலையில் தொங்கும் பெரிய மரக் கிளைகளையும் மாமன்னர் கண்காணித்தார். இது பொதுமக்களுக்கு, குறிப்பாக இரவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மன்னர் குறிப்பிட்டார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்