Jul 5, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து விலகும் ஆசியான் நாடுகள்: மலேசியா புதிய அத்தியாயம்
தற்போதைய செய்திகள்

அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து விலகும் ஆசியான் நாடுகள்: மலேசியா புதிய அத்தியாயம்

Share:

ரியோ டி ஜெனிரோ, ஜூலை.06-

ஆசியான் உறுப்பு நாடுகள் அமெரிக்க டாலரின் பிடியிலிருந்து விடுபட்டு, உள்ளூர் நாணயப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று BRICS உச்சிநிலை மாநாட்டில் உரையாற்றிய மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இது நிதி அமைப்பை வலுப்படுத்துவதற்கும், ஒருதலைப்பட்ச ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும் என அவர் குறிப்பிட்டார்.

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே உள்ளூர் நாணயங்களில் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. இது தொடக்கத்தில் சிறிய அளவில் இருந்தாலும், எதிர்காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அன்வார் தெரிவித்தார். BRICS உறுப்பு நாடுகள் தங்களுக்குள்ளான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அனைத்து கூட்டாளர்களுடனும் பாதுகாப்பாகவும் நியாயமாகவும் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மலேசியா 2025ல் ஆசியான் தலைவராகவும், இவ்வாண்டு ஜனவரி 1 முதல் BRICS நட்பு நாடாகவும் இந்த உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது