காஜாங், சுங்காய் லோங் கில் மனைவியை கண்மூடித்தனமாக அடித்து காயங்களை விளைவித்து, அவரின் மரணத்திற்கு காரணமானவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
மனைவியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தப் பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 32 வயதுடைய அந்த மாது சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜெய்த் ஹாசன் தெரிவித்தார்.
தமது மனைவி இறந்து விட்டார் என்பதை அறிந்தப் பின்னரே 32 வயதுடைய அந்த நபர் தலைமறைவாகி விட்டதாக நம்பப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் அந்த தனியார் மருத்துவமனையின் தாதி ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சவப்பரிசோதனைக்காக அந்த மாதுவின் உடல் செர்டாங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Mohd Zaid Hassan குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


