காஜாங், சுங்காய் லோங் கில் மனைவியை கண்மூடித்தனமாக அடித்து காயங்களை விளைவித்து, அவரின் மரணத்திற்கு காரணமானவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.
மனைவியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தப் பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 32 வயதுடைய அந்த மாது சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜெய்த் ஹாசன் தெரிவித்தார்.
தமது மனைவி இறந்து விட்டார் என்பதை அறிந்தப் பின்னரே 32 வயதுடைய அந்த நபர் தலைமறைவாகி விட்டதாக நம்பப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் அந்த தனியார் மருத்துவமனையின் தாதி ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சவப்பரிசோதனைக்காக அந்த மாதுவின் உடல் செர்டாங் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக Mohd Zaid Hassan குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


