Feb 20, 2026
Thisaigal NewsYouTube
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 நண்பர்கள் மீது வழக்கு: விசாரணை கோரினர்
தற்போதைய செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 நண்பர்கள் மீது வழக்கு: விசாரணை கோரினர்

Share:

கிள்ளான், பிப்ரவரி.20-

இரண்டு வாரங்களுக்கு முன்பு புஞ்சாக் ஆலாம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நண்பர்கள், கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

விற்பனை நிர்வாகியான 25 வயது இர்ஃபான் முஹமட் மற்றும் பொது உயர் கல்வி கல்விக்கூட மாணவனான 25 வயது அஹ்மாட் ஹம்ஸி அலியாஸ் ஆகிய இருவர் மீதும் தனித்தனியாகக் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

நீதிபதி சித்தி அமினா காஸாலி முன்னிலையில் இருவரும் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை விளக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் அந்த வாடகை வீட்டின் அறையில் சிறுமிக்கு எதிராக இர்ஃபான் இக்கொடூரச் செயலைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதே சிறுமிக்கு எதிராக, அதே இடத்தில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஹம்ஸி அலியாஸ் எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சந்தை நிலவரத்தினால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

சந்தை நிலவரத்தினால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

சிகாமாட்டில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு

சிகாமாட்டில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் வாய்க்காலில் கண்டெடுப்பு

தந்தையின் விமான விபத்து நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு, மகனின் ராணுவக் கனவும் சோகத்தில் முடிந்தது

தந்தையின் விமான விபத்து நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு, மகனின் ராணுவக் கனவும் சோகத்தில் முடிந்தது

ரஃபிஸி மீதான ஊழல் புகார்கள் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் - அன்வார் இப்ராஹிம்

ரஃபிஸி மீதான ஊழல் புகார்கள் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் - அன்வார் இப்ராஹிம்

பிஎல்கேஎன் 3.0 தொடர்: பயிற்சியாளர்கள் இன்று முதல் தங்களின் தேர்வு நிலையைச் சரிபார்க்கலாம்

பிஎல்கேஎன் 3.0 தொடர்: பயிற்சியாளர்கள் இன்று முதல் தங்களின் தேர்வு நிலையைச் சரிபார்க்கலாம்

அஸாம் பாக்கியின் பங்குகள் குறித்த புகாரை போலீசார் விசாரிக்க வேண்டும்: நூருல் இசா வலியுறுத்தல்

அஸாம் பாக்கியின் பங்குகள் குறித்த புகாரை போலீசார் விசாரிக்க வேண்டும்: நூருல் இசா வலியுறுத்தல்