Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நான்கு ஆயிரம் கோப்புகள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


சில நிதி நிறுவனங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகளுடன் நிதி ஆலோசனை நிறுவனம் சம்பந்தப்பட்ட 700 மில்லியன் ரிங்கிட் கடன் சட்டவிரோதமாக அரசாங்க ஊழியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய மோசடி தொடர்பில் இதுவரையில் நான்கு ஆயிரம் கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இந்த மோசடிக் கும்பலின் செயல், வெட்ட வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஓப் ஸ்கை சோதனை நடவடிக்கையின் மூலம் கடந்த திங்கட்கிழமை முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் 12 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 24 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இதில் மொத்தம் 16 வங்கி அதிகாரிகள் மற்றும் நிதி ஆலோசகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்