Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நான்கு ஆயிரம் கோப்புகள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


சில நிதி நிறுவனங்களை சேர்ந்த வங்கி அதிகாரிகளுடன் நிதி ஆலோசனை நிறுவனம் சம்பந்தப்பட்ட 700 மில்லியன் ரிங்கிட் கடன் சட்டவிரோதமாக அரசாங்க ஊழியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மிகப்பெரிய மோசடி தொடர்பில் இதுவரையில் நான்கு ஆயிரம் கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இந்த மோசடிக் கும்பலின் செயல், வெட்ட வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஓப் ஸ்கை சோதனை நடவடிக்கையின் மூலம் கடந்த திங்கட்கிழமை முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் 12 தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 24 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இதில் மொத்தம் 16 வங்கி அதிகாரிகள் மற்றும் நிதி ஆலோசகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி