Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பராமரிப்பு இல்லத்தில் இருந்து காணாமல் போன சிறுமியைக் காவல் துறை தேடுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.02-

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை தப்பிச் சென்ற 17 வயது சிறுமி தவமலர் காணாமல் போனதாகக் கூறப்படுவதை அடுத்து, காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். அவர் கடைசியாக பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு 7.05 மணியளவில் செக்சன் 12, ஜாலான் 12/6 எனும் பகுதியில் காணப்பட்டார். மார்ச் 1ஆம் தேதி மாலை 5.13 மணியளவில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேடும் பணியில் காவல் துறை களமிறங்கியுள்ளது.

அந்த இளம்பெண் 159 சென்டிமீட்டர் உயரமும், 52 கிலோ எடையும், கருமையான நீண்ட முடியும் ஒல்லியான உடல்வாகும் கொண்டவர். அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு