Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஈப்போ பெரிய சந்தையை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் 15 மில்லியன் ரிங்கிட் நிதி

Share:

ஈப்போ, ஜன.26-

ஈப்போ நகரில் உள்ள ஈப்போ பெரிய சந்தையை நவீனமயமாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கம் 15 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக வீட்டுவசதி, ஊரட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார். இந்தச் சந்தை 50 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. இதன் மூலம் சந்தையின் பழைய தோற்றத்தை மாற்றி, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஈப்போ மாநகராட்சி இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தி வருகிறது. இந்த பணிகள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, பேரா மாநிலத்தில் உள்ள மற்றொரு பாரம்பரிய சந்தையான பசார் பசீர் பிஞ்சியை மேம்படுத்த 16 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய வணிக இடங்கள், கார் - மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடங்கள் ஆகிய நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த பணிகள் நவம்பர் 2026 இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஙா கோர் மிங் தெரிவித்தார். முன்னதாக, Canning சந்தை மேம்பாட்டு பணிகள் 5 இலட்ச ரிங்கிட் செலவில் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி