Mar 19, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காகப் போக்குவரத்து தீவிரம்: கூடுதலாக 400 ஊழியர்களை நிறுத்தும் ரெபிட் கேஎல்!
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காகப் போக்குவரத்து தீவிரம்: கூடுதலாக 400 ஊழியர்களை நிறுத்தும் ரெபிட் கேஎல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

வரும் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சநிலை மாநாடும், அதனுடன் தொடர்புடைய அமர்வுகளின் போதும் பயணச் செயல்பாடுகளைச் சீராக உறுதிப்படுத்த, ரெபிட் கேஎல் நிறுவனம் முக்கிய நிலையங்களில் கூடுதலாக 400 ஊழியர்களைப் பணியமர்த்தியுள்ளது. மாநாட்டுக் காலப் பகுதியில் பொதுப் போக்குவரத்துச் சேவை தடையின்றி இயங்குவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் செயலூக்கமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

உச்ச நேரங்களில் தொடர்வண்டிகள் இயக்கத்தை நீட்டிப்பதுடன், பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் கண்காணிப்பை மேம்படுத்தவும் ரெபிட் கேஎல் தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையில், Express Rail Link - ERL நிறுவனம் KLIA Ekspres தொடர்வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன், KL Sentral-லை நோக்கிச் செல்லும் KLIA Transit தொடர்வண்டிகளும் அக்டோபர் 22 முதல் 28 வரை கூடுதலாக இயக்கும் என்று அறிவித்துள்ளது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்