கடந்த திங்கட்கிழமை ஜோகூர், கோத்தா திங்கி செனாய் - டெசாரு நெடுஞ்சாலையில் மற்ற வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மிக அபாயகரமாக டொயோட்டா கேம்ரி வாகனத்தை செலுத்திய ஆடர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உள்ளூரைச் சேர்ந்த 53 வயதுடைய அந்த வாகனமோட்டி இன்று காலை 8.30 மணியளவில் கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.








