நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய ஊக்கத் திட்டங்களை அறிவிப்பதற்கு முன்னதாக, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியை சீரமைப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகளால் உள்நாட்டில் பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதே தற்போதைய முக்கியத் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
விநியோகச் சங்கிலி வலுவாக இருந்தால் மட்டுமே, அரசு வழங்கும் பொருளாதார ஊக்கத்தொகைகள் முழுமையாக மக்களைச் சென்றடையும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், உலகளாவிய மோதல்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள சூழலில், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் எடுத்து வருவதாகப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.








