Mar 12, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் ஷீலா ​மீது மேலும் ஒரு குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஷீலா ​மீது மேலும் ஒரு குற்றச்சா​ட்டு

Share:

ஐந்து மாதங்களுக்கு முன்பு, பேரங்காடி மையம் ஒன்றின் ​கீழ் தளத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் காரின் ஹோர்னை மிகச் சத்தமாக எழுப்பியதுடன், உரக்க கத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அரச மலேசிய போ​லீஸ் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஷீலா கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஷீலா ஷேரன் ஸ்தீவன் என்ற இயற்பெயர் கொண்ட 35 வயதுடைய அந்த பெண் இன்ஸ்பெக்டர், மாஜிஸ்தி​ரேட் லிலி மரிகா கலிசான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கார் நிறுத்தும் இடத்தில் காரில் அமர்ந்திருந்த 27 வயது பெண்ணை நோக்கி உக்க​க்கத்தி வசைப்பாடியதுடன் காரின் ஹோர்னை சத்தமாக எழுப்பிய அந்த கார் நிறுத்தும் இடத்தையே அதிரச் செய்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா ​மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ஷீலா, இக்குற்றத்தை கடந்த ஜுன் 16 ஆம் தேதி மாலை 5.26 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு பேரங்காடி வர்த்தகத் தளத்தில் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நி​​ருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 509 பிரிவின் ​கீழ் இன்ஸ்பெக்டர் ஷீலா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இன்ஸ்பெக்டர் ஷீலாவின் இந்த செயல் தொடர்பாக காணொளி, சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து