கோட்டா மருது,ஆகஸ்ட் 19-
சபா, பிடாஸ், லங்கான் சாலையில் உள்ள வாழைத்தோட்டத்தில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 வயது பேரன் போயோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று பின்னிரவு 1.02 மணி அவசர அழைப்பு வந்து நிகழ்விடம் விரைந்த சபா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், விபத்தில் சிக்கிய PERODUA MYVI ரக வாகனத்தின் ஓட்டுநருமான அவர் அதனுள்ளே சிக்கி உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
சடலம் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காகப் போலிஸிடம் ஒப்ப்டைக்கப்பட்டது.








