பேராக் மாநிலம் கம்பார், தமன் பந்தர் பாருவில் நேற்று, மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் கத்தியால் குத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
நேற்று இரவு 7.35 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, அந்த ஆடவர் தனது 56 வயது சகோதரி மற்றும் 22 வயது மகனை கத்தியால் கழுத்தில் குத்தியதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரி தாவூத் தெரிவித்துள்ளார்.
கத்தி குத்துக் காயங்களுக்கு உள்ளான இருவருமே கவலைக்கிடமான நிலையில் பேர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
58 வயதான அந்த ஆடவர், முன்னதாக ஈப்போ பாத்திமா மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்றுள்ள நிலையில், மேல் சிகிச்சைக்காக பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்றும் நாஸ்ரி தாவூத் குறிப்பிட்டுள்ளார்.








