May 18, 2026
Thisaigal NewsYouTube
பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் உட்பட சில பொது இடங்களில் மது அருந்துவதற்குத் தடை
தற்போதைய செய்திகள்

பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் உட்பட சில பொது இடங்களில் மது அருந்துவதற்குத் தடை

Share:

ஈப்போ, ஜூலை.02-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் குறிப்பிட்ட பூங்காக்கள், கடற்கரைகள் உட்பட சில பொது இடங்களில் மதுபானம் அருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.
போர்ட்டிக்சன் கடற்கரைப் பகுதியில் மதுபானம் அருந்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தவிர பொது மைதானங்கள், குழந்தைகள் விளையாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் மதுபானங்களை உட்கொள்வதைத்க் தடை செய்ய தனது தலைமையிலான மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமினுடின் தெரிவித்தார்.

மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அதிக எண்ணிக்கையிலான புகார்களைத் தொடர்ந்து மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த உத்தரவை மீறுகின்றவர்களுக்கு 2 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி