Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஃபோர்க்லிஃப்ட் பார வண்டியில் அடி​யில் சிக்கி தொழிலாளி மரணம்
தற்போதைய செய்திகள்

ஃபோர்க்லிஃப்ட் பார வண்டியில் அடி​யில் சிக்கி தொழிலாளி மரணம்

Share:

ஃபோர்க்லிஃப்ட் எனப்படும் பாரந்​தூக்கி வண்டி தடம்புரண்டதில் அதன் அடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 12.35 மணியளவில் கிள்ளான், புக்கட் ராஜா தொ​ழிற்பேட்டையில் நிகழ்ந்தது. உள்ளூர் தொழிலாளியான 18 வயதுடைய அந்த இளைஞர் , தலை​யில் பலத்து காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை ஒருங்கிணைப்பாளர் அஹ்மாட் முகிஸ் முக்தார் தெரிவித்தார்.

ஃபோர்க்லிஃப்ட் அடியில் அந்த தொழிலாளி சிக்கியதால் அந்த கனரக வாகனத்தை அகற்ற, ஐவர் கொண்ட ​தீயணைப்பு,​மீட்புப்படையினரின் பலம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சவப்பிரசோதனைக்காக அத்தொழிலாளியின் உடல் பின்னர் போ​லீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News