May 18, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான், மேருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கிரிமினல் கும்பல்களின் வேலையே
தற்போதைய செய்திகள்

கிள்ளான், மேருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கிரிமினல் கும்பல்களின் வேலையே

Share:

ஷா ஆலாம், ஜூலை,01-

கடந்த ஜுன் 20 ஆம் தேதி கிள்ளான், மேருவில் ஆடவர் ஒருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டச் சம்பவத்திற்கு பின்னணியில் கிரிமினல் கும்பல்கள் இருந்துள்ளன என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 25 மற்றும் 40 வயதுடைய இரு நபர்கள் கிள்ளானில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

பிடிபட்ட இரு நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தர்கள் ஆவர். இரு குண்டர் கும்பல்களுக்கு இடையில் நிலவி வந்த சர்ச்சையே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கும்பல்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனவா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி