2023 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் டி.ஏ.பி.யை சேர்ந்த லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் ஹோக் லியோங் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
SPM தேர்வில் 9 A அல்லது அதற்கும் மேற்பட்ட சிறந்த அடைவு நிலையைப் பெற்ற தமது லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 18 மாணவர்கள் மேற்கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், கல்வி நிதிக்காகவும் மாணவர்களுக்கு தமது அன்பளிப்பாக பாங் ஹோக் லியோங், தலா 1,000 வெள்ளியை வழங்கினார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் சிறந்த அடைவு நிலையைப் பெற்று பள்ளிக்கும், லாபிஸ் வட்டாரத்திற்கும் பெருமை சேர்ப்பதற்கு துணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக.
இவர்கள் வருகின்ற காலத்திலும் தொடர் வெற்றிகளை குவிக்க தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக பாங் ஹோக் லியோங் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.









