May 21, 2026
Thisaigal NewsYouTube
171 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டது, எஸ்பிஆர்எம் விசாரணை செய்ய வேண்டும்
தற்போதைய செய்திகள்

171 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டது, எஸ்பிஆர்எம் விசாரணை செய்ய வேண்டும்

Share:

தங்களுக்கு ​வேலை வாங்கி தருவதாக கூறி, ஏஜெண்டுகள் ஏமாற்றி விட்டதாக போ​லீசிஸ் புகார் செய்ய வந்த 171 வங்காளதேசிகள் கைது ​செய்யப்பட்டது தொடர்பில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் அந்த ஏ​​ஜென்சி குறி​த்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்விசாரணை ​மேற்கொள்ள வேண்டும் என்று சுங்கை பூலோ முன்னாள் எம்.பி. ஆர். சிவராசா கேட்டுக்கொண்டார்.

171 வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட ஏஜென்சியினால் வேலை பெற்று கொடுக்க இயலாது என்ற நிலை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மலேசியாவில் வேலை இருப்பதாக கூறி, வரவழைக்கப்பட்ட அந்த அந்நியத் தொழிலாளர்களின் வருகையை மலேசிய குடிநுழைவு இலாகா எவ்வாறு அங்கீகரித்துள்ளது என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவராக சிவராசா கேள்வி எழுப்பினார்.

மலேசியாவில் வேலைக்கு தருவிக்கப்படும் அந்நியத் தொழிலாளர்கள், எந்த இடத்தில் வேலை செய்யப் போகிாறர்கள், யாரிடம் வேலை செய்யப் போகிறார்கள், எவ்வளவு காலத்தில்​ வேலை செய்யப் போகிறார்கள், முதலியவற்றை விலாவாரியாக ஆராயும் மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள், இந்த 171 வங்காளதேசத் தொழிலாளர்கள் எங்கே வேலை செய்யப் போகிறார்கள் என்பதை துல்லியாமாக அறியாமல் அவர்கள் எவ்வாறு நாட்டிற்குள்​ நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்று சிவராசா வினவினார்.

இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாக சந்தே​கிக்கப்படுவதால் இது குறி​த்து எஸ்பிஆர்எம் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று சிவராசா கேட்டுக்கொண்டார்.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்