தொழிலாளர் சேமநிதி வாரிமான இபிஎப். பின் 81 விழுக்காட்டு சந்தாதாரர்கள், பணி ஓய்வுப் பெறும் போது அவர்களுக்குப் போதுமான சேமிப்பு இருக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.
19 விழுக்காட்டினர் மட்டுமே தங்களின் 55 ஆவது வயதில் தலா 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி சேமிப்பைக் கொண்டிருக்கும் அளவிற்கு அவர்களின் அடிப்படை சேமிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
55 வயது மற்றும் அதற்கு கீழ் பட்ட வயதுடைய 81 விடுக்காடு சந்தாதாரர்கள் பணி ஓய்வுப் பெறும் காலத்தில், போதுமான சேமிப்பைக் கொண்டிருக்காத காரணத்தால், அவர்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படலாம் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
தவிர, தற்போது 54 வயதை எட்டியுள்ள 2 லட்சத்து 75 ஆயிரம் இபிஎப். சந்தாதாரர்களில், ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அல்லது அதற்கு கீழ் பட்ட தொகையைத் தங்களின் வாழ்நாள் சேமிப்பாக கொண்டிருக்கின்றனர்.
இதன் பொருள், அடுத்த 20 ஆண்டுக் காலக்கட்டத்தில் அவர்களின் இபிஎப். ஓய்வு ஊதியம், மாதத்திற்குச் சராசரி 208 வெள்ளி என்பதையே அவர்களின் இந்த 50 ஆயிரம் வெள்ளி சேமிப்பு சித்தரிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

தற்போதைய செய்திகள்
பணி ஓய்வுப் பெறும் போது 81 விழுக்காடு இபிஎப் சந்தாதாரர்களுக்கு போதுமான சேமிப்பு இருக்காது
Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


