தொழிலாளர் சேமநிதி வாரிமான இபிஎப். பின் 81 விழுக்காட்டு சந்தாதாரர்கள், பணி ஓய்வுப் பெறும் போது அவர்களுக்குப் போதுமான சேமிப்பு இருக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.
19 விழுக்காட்டினர் மட்டுமே தங்களின் 55 ஆவது வயதில் தலா 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி சேமிப்பைக் கொண்டிருக்கும் அளவிற்கு அவர்களின் அடிப்படை சேமிப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
55 வயது மற்றும் அதற்கு கீழ் பட்ட வயதுடைய 81 விடுக்காடு சந்தாதாரர்கள் பணி ஓய்வுப் பெறும் காலத்தில், போதுமான சேமிப்பைக் கொண்டிருக்காத காரணத்தால், அவர்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படலாம் என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
தவிர, தற்போது 54 வயதை எட்டியுள்ள 2 லட்சத்து 75 ஆயிரம் இபிஎப். சந்தாதாரர்களில், ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அல்லது அதற்கு கீழ் பட்ட தொகையைத் தங்களின் வாழ்நாள் சேமிப்பாக கொண்டிருக்கின்றனர்.
இதன் பொருள், அடுத்த 20 ஆண்டுக் காலக்கட்டத்தில் அவர்களின் இபிஎப். ஓய்வு ஊதியம், மாதத்திற்குச் சராசரி 208 வெள்ளி என்பதையே அவர்களின் இந்த 50 ஆயிரம் வெள்ளி சேமிப்பு சித்தரிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

தற்போதைய செய்திகள்
பணி ஓய்வுப் பெறும் போது 81 விழுக்காடு இபிஎப் சந்தாதாரர்களுக்கு போதுமான சேமிப்பு இருக்காது
Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


