Aug 2, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 07-

கோலாலம்பூரில் உள்ள உறைவிடப் பள்ளியில் பாடகர் ஒருவரின் மகனும், இன்னும் சில மாணவர்களும் பகடிவதைக்கு ஆளாகியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுவரை 5 புகார்களை தாங்கள் பெற்றுள்ளதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் கூறினார்.

குற்றவியல் சட்டம் 323வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று ஏசிபி சுலிஸ்மி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

51 வயது பாடகர் , தனது 14 வயது மகன் பகடிவதை செய்யப்பட்டதாகவும், அது குறித்து பள்ளி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்.

அந்த பாடகரைப் போல மேலும் சில பெற்றோர்களும் கடந்த ஆண்டு இறுதியில் தங்கள் பிள்ளைகள் பகடிவதைக்கு ஆளாகியதாக புகார் அளித்துள்ளனர்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு