Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கார் மின் கம்பத்தில் மோதியது: கணவர் பலி, மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கார் மின் கம்பத்தில் மோதியது: கணவர் பலி, மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் படுகாயம்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.06-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவர் உயிரிழந்த வேளையில் மனைவி மற்றும் கைக்குழந்தை உட்பட மூன்று பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 22, பெர்சியாரான் தெங்கு அம்புவானில் நிகழ்ந்தது.

புரோட்டோன் சாகா FLX சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிய 39 வயது நபர், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப் படை இலாகாவின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

அந்நபரின் 38 வயது மனைவி மற்றும் அவரின் மூன்று பிள்ளைகளான 7 மாதக் கைக்குழந்தை, 7,4 வயதுடைய இரு சிறார்கள் கடுமையாகக் காயமுற்று ஷா ஆலாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி