Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கார் மின் கம்பத்தில் மோதியது: கணவர் பலி, மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கார் மின் கம்பத்தில் மோதியது: கணவர் பலி, மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் படுகாயம்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.06-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவர் உயிரிழந்த வேளையில் மனைவி மற்றும் கைக்குழந்தை உட்பட மூன்று பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.20 மணியளவில் ஷா ஆலாம், செக்‌ஷன் 22, பெர்சியாரான் தெங்கு அம்புவானில் நிகழ்ந்தது.

புரோட்டோன் சாகா FLX சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிய 39 வயது நபர், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப் படை இலாகாவின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

அந்நபரின் 38 வயது மனைவி மற்றும் அவரின் மூன்று பிள்ளைகளான 7 மாதக் கைக்குழந்தை, 7,4 வயதுடைய இரு சிறார்கள் கடுமையாகக் காயமுற்று ஷா ஆலாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு