பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலை 4 மணிக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், மொத்தம் 39 ஆயிரத்து 380 கோடி வெள்ளி மதிப்புள்ள வரவு செலவுத் திட்டமாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த பட்ஜெட், 3.3 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு மொத்தம் 38 ஆயிரத்து 800 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது. இந்த 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கூடுதலாக 580 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் அறிவித்தார்.








