Mar 14, 2026
Thisaigal NewsYouTube
உணவுக்காகக் கொடிய விலங்கை வேட்டையாடிய 5 மியான்மார் நாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

உணவுக்காகக் கொடிய விலங்கை வேட்டையாடிய 5 மியான்மார் நாட்டவர் கைது

Share:

பாதுகாக்கப்பட்டக் கொடிய வனவிலங்குகளை உணவுக்காகவும் அதன் உடல் உறுப்புகளுக்காகவும் வேட்டையாடிய கும்பல் கைது செய்யப்பட்டது.

கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில், கோல லிப்பிசில் உள்ள டுரியான் தோட்டத்தில் இருந்த வீட்டில் நடத்தப்பட்டச் சோதனையில், இந்த விவகாரம் அம்பலமானது என வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பூங்கா துறையின் டத்தோ அப்துல் கடிர் அபு ஹஷிம் தெரிவித்தார்.

அந்தச் சோதனையில் Asian glossy starling, Lesser coucal, Chestnut-breasted malkoha ஆகிய பறவைகளின் இறகுகளையும் Great argus பறவையில் கால்களையும் வைத்திருந்த 5 மியான்மார் நாட்டவர் கைது செய்யப்பட்டனர் என அப்துல் கடிர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்டவை கோல லிப்பிஸ் மாவட்டக் காவல் துறை தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை உணவுக்காகவும் கால், நகம், இறகுகள், தோல் ஆகியவற்றை சேகரித்து வைத்திருந்ததாக அப்துல் கடிர் கூறினார்.

Related News