பகாங், பேரா போன்ற மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்ததைப் போல மலாக்கா உட்பட இதர மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் உள்ள அரசியல் சூழலுக்கும், இதர மாநிலங்களில் உள்ள அரசியல் சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் நேஷனல் அதிகமான தொகுதிகளை வென்று, அறுதி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு அதிகாரம் பெற்றது. ஆனால், இதர மாநிலங்களில் அத்தகைய சூழல் இல்லை. பக்காத்தான் ஹராப்பானின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையும், நிர்பந்தமும் ஏற்பட்டதால் அந்த மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அகமட் ஜாஹிட் மறைமுகமாக கோடி காட்டினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


