பகாங், பேரா போன்ற மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்ததைப் போல மலாக்கா உட்பட இதர மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் உள்ள அரசியல் சூழலுக்கும், இதர மாநிலங்களில் உள்ள அரசியல் சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் நேஷனல் அதிகமான தொகுதிகளை வென்று, அறுதி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு அதிகாரம் பெற்றது. ஆனால், இதர மாநிலங்களில் அத்தகைய சூழல் இல்லை. பக்காத்தான் ஹராப்பானின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையும், நிர்பந்தமும் ஏற்பட்டதால் அந்த மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அகமட் ஜாஹிட் மறைமுகமாக கோடி காட்டினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


