பகாங், பேரா போன்ற மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்ததைப் போல மலாக்கா உட்பட இதர மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் உள்ள அரசியல் சூழலுக்கும், இதர மாநிலங்களில் உள்ள அரசியல் சூழலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் நேஷனல் அதிகமான தொகுதிகளை வென்று, அறுதி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு அதிகாரம் பெற்றது. ஆனால், இதர மாநிலங்களில் அத்தகைய சூழல் இல்லை. பக்காத்தான் ஹராப்பானின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையும், நிர்பந்தமும் ஏற்பட்டதால் அந்த மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அகமட் ஜாஹிட் மறைமுகமாக கோடி காட்டினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


