பழையப் பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்த மூதாட்டியை கட்டியணைத்து மானபங்கம் செய்ததாக ஐ.நா. தூதரகத்தின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அம்பாங், தாமான் மூடா, கெடாய் ஜாலான் பூங்கா தஞ்சோங் என்ற இடத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார். ஆடை களைந்த நிலையில் 71 வயது மூதாட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 23 வயதுடைய அந்த அந்நிய நாட்டு ஆடவரை, பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக முகமட் அஸாம் குறிப்பிட்டார். அந்த ஆடவர், அப்பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!


