பழையப் பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்த மூதாட்டியை கட்டியணைத்து மானபங்கம் செய்ததாக ஐ.நா. தூதரகத்தின் அகதிகளுக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அம்பாங், தாமான் மூடா, கெடாய் ஜாலான் பூங்கா தஞ்சோங் என்ற இடத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார். ஆடை களைந்த நிலையில் 71 வயது மூதாட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 23 வயதுடைய அந்த அந்நிய நாட்டு ஆடவரை, பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக முகமட் அஸாம் குறிப்பிட்டார். அந்த ஆடவர், அப்பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்


