லஞ்ச ஊழல் குற்றத்திற்காக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் முன்னாள் துணை இயக்குநருக்கு கோலாலம்பூர் உயர் நீதின்றம் இன்று 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் வெள்ளி அபராதம் விதித்தது. சாபுதீன் முகமது சலே என்ற அந்த முன்னாள் துணை இயக்குநர், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வேலை பெர்மிட் வெளியீடு தொடர்பாக 2 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
சாபுதீன் எதிர்நோக்கியிருந்த இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுதலை செய்து, கடந்த 2022 ஆம ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார். பிராசிகியூஷனின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி முனியாண்டி, 62 வயதுடைய சாபுதீன்- க்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


