லஞ்ச ஊழல் குற்றத்திற்காக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் முன்னாள் துணை இயக்குநருக்கு கோலாலம்பூர் உயர் நீதின்றம் இன்று 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் வெள்ளி அபராதம் விதித்தது. சாபுதீன் முகமது சலே என்ற அந்த முன்னாள் துணை இயக்குநர், கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வேலை பெர்மிட் வெளியீடு தொடர்பாக 2 லட்சம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
சாபுதீன் எதிர்நோக்கியிருந்த இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுதலை செய்து, கடந்த 2022 ஆம ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார். பிராசிகியூஷனின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி முனியாண்டி, 62 வயதுடைய சாபுதீன்- க்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்


