May 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர், புக்கிட் கெப்போங்கில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் கலக்கம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர், புக்கிட் கெப்போங்கில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் கலக்கம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.28-

ஜோகூர் புக்கிட் கெப்போங் பகுதியில் இன்று காலை 8.55 மணிக்குத் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டது. ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவு செய்யப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்பதோடு, நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஜோகூர் மாநில முதல்வர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவித்துள்ளார்.

நிலவரத்தை அரசும் பாதுகாப்பு அமைப்புகளும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதால், பொதுமக்கள் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ளாமல் அமைதி காக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செகாமட், பத்து பகாட் உள்ளிட்ட பகுதிகளில் ரிக்டர் அளவில் 2.5 முதல் 4.1 வரை அடுத்தடுத்து பல நில அதிர்வுகள் பதிவாகி இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்றக் கட்டடங்களை விட்டு விலகி இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித அசம்பாவிதங்களையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்