Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ரயிலில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி விதியை மீறியிருக்கவில்லை.
தற்போதைய செய்திகள்

ரயிலில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி விதியை மீறியிருக்கவில்லை.

Share:

கோலாலம்பூர், மே 21-

தங்களுக்கு சொந்தமான ரயிலில் நடத்தப்பட்ட பிங்கிஷ் திருவிழா எனும் இசைநிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் விதிமுறைகளை மீறியிருக்கவில்லை என கெரெத்தா ஆப்பி தானா மெலாயு நிறுவனம் - KTMB தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர்-ரிலிருந்து செரண்டா-வுக்கு இருவழி பயணம் அடிப்படையில், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுவினர், சிறப்பு ரயில் பெட்டி வாடகை சேவையை நாடியிருந்தனர்.

அத்தரப்பினருக்கு அச்சேவையை வழங்குவதற்கு முன்னர், புகைபிடித்தல், மது அருந்துதல், போதைபொருளை உட்கொள்ளுதல் முதலான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் அந்நிகழ்ச்சியில் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனைகளை தங்கள் தரப்பு விதித்திருந்ததை, KTMB நிறுவனம் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்குமுன்பு, சம்பந்தப்பட்ட ரயில் சேவையில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி, இதர பயனர்களுக்கு தொந்தரவை வழங்கியதாக சமூக ஊடகங்களில் அதிருப்திகள் பரவிய நிலையில், KTMB நிறுவனம் அந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து