விரைவில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான ஜசெக வேட்பாளர்கள் பட்டியல் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் போலியானது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய அந்த ஆவணத்தைப் பகிர்ந்துள்ள தியோ, பொதுமக்கள் யாரும் இத்தகைய உறுதிப்படுத்தப்படாத பொய் தகவல்களைப் பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், நேற்று பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலும் போலியானது என்று அதன் மாநிலச் செயலாளர் அப்துல் ஹலிம் சுலைமான் குறிப்பிட்டு இருந்தார்.
கடந்த திங்கட்கிழமை ஜொகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, அடுத்த 60 நாட்களுக்குள் 16-ஆவது மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.








