இனம் மற்றும் சமயத்தை அடிப்படையாக கொண்டு நாட்டின் நல்லிணக்கத்திற்கும் பொது அமைதிக்கும் ஊறுவிளைக்கும் வெறுப்புணர்வை தூண்டும் அறிக்கைகளை வெளியிடும் நபர்களை சட்ட ரீதியாக தண்டிப்பதற்கு புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது இது போன்ற குற்றங்களுக்கு நடப்பு சட்டங்கள் வகை செய்த போதிலும் இனம் மற்றும் சமயம் தொடர்புடைய உணர்ச்சிகரமான விவகாரங்களை முன்னிலைப்படுத்தி, வெறுப்புணர்வை தூண்டும் அறிக்கைகளை வெளியிடும் நபர்களை தண்டிப்பதற்கு பிரத்தியேக சட்டம் இல்லை என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் கரென் செஹ் தெரிவித்தார்.
இது போன்ற குற்றங்களுக்கு 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டம் வகை செய்கிறது. ஆனால், அதற்கு மாற்றாக பிரத்தியேக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று கரென் செஹ் வரியுறுத்தியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


