இனம் மற்றும் சமயத்தை அடிப்படையாக கொண்டு நாட்டின் நல்லிணக்கத்திற்கும் பொது அமைதிக்கும் ஊறுவிளைக்கும் வெறுப்புணர்வை தூண்டும் அறிக்கைகளை வெளியிடும் நபர்களை சட்ட ரீதியாக தண்டிப்பதற்கு புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது இது போன்ற குற்றங்களுக்கு நடப்பு சட்டங்கள் வகை செய்த போதிலும் இனம் மற்றும் சமயம் தொடர்புடைய உணர்ச்சிகரமான விவகாரங்களை முன்னிலைப்படுத்தி, வெறுப்புணர்வை தூண்டும் அறிக்கைகளை வெளியிடும் நபர்களை தண்டிப்பதற்கு பிரத்தியேக சட்டம் இல்லை என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் கரென் செஹ் தெரிவித்தார்.
இது போன்ற குற்றங்களுக்கு 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டம் வகை செய்கிறது. ஆனால், அதற்கு மாற்றாக பிரத்தியேக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று கரென் செஹ் வரியுறுத்தியுள்ளார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


