இனம் மற்றும் சமயத்தை அடிப்படையாக கொண்டு நாட்டின் நல்லிணக்கத்திற்கும் பொது அமைதிக்கும் ஊறுவிளைக்கும் வெறுப்புணர்வை தூண்டும் அறிக்கைகளை வெளியிடும் நபர்களை சட்ட ரீதியாக தண்டிப்பதற்கு புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது இது போன்ற குற்றங்களுக்கு நடப்பு சட்டங்கள் வகை செய்த போதிலும் இனம் மற்றும் சமயம் தொடர்புடைய உணர்ச்சிகரமான விவகாரங்களை முன்னிலைப்படுத்தி, வெறுப்புணர்வை தூண்டும் அறிக்கைகளை வெளியிடும் நபர்களை தண்டிப்பதற்கு பிரத்தியேக சட்டம் இல்லை என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் கரென் செஹ் தெரிவித்தார்.
இது போன்ற குற்றங்களுக்கு 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டம் வகை செய்கிறது. ஆனால், அதற்கு மாற்றாக பிரத்தியேக புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும் என்று கரென் செஹ் வரியுறுத்தியுள்ளார்.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


