பிக்கப் வகை வாகனத்தின் சக்கரத்தில் 10.6 கிலோ எடை கொண்ட போதைப் பொருளைக் கடத்டியதற்காக இரு தாய்லாந்து நாட்டவர்களை போலீஸ் கைது செய்துள்ளது.
கெடா போலீஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சாலெ இவ்விவகாரம் குறித்து வெளியிட்ட அறிகையில், கடந்த வியாழக்கிழமை, இரவு 11.00 மணி அளவில் ஆயெர் ஹித்தாம், ஜாலான் சுங்ஙாய் கோரோக் , கம்போங் பாரு பாலாய் போஸ் அருகே அந்த இரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக கம்போங் பாரு பாலாய் போஸ் டத்தோ ஃபிசோல் சாலெ குறிப்பிட்டார்.
போலீசாரின் வருகையை உணர்ந்த அவர்கள் தப்பிக்க முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததோடு அங்கேயே கைது செய்யப்பட்டனர். 10 பிளாஸ்டிக் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்ட போதைப் பொருட்கள். அவர்கள் ஓட்டி வந்த பிக்கப் பவை காரின் கூட்தல் சக்கரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் ஏற்கெனவே இதே முறையைப் பயன்படுத்தி போதைப் பொருளைக் கடத்த முயற்சி செய்தவர் எனக் குறிப்பிட்ட டத்தோ ஃபிசோல், இம்முறை போலீசாரிடம் சிக்கினார் என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 3 லட்சத்து 49 ஆயிரத்து 800 வெள்ளியாகும்.








