டிச. 30-
பத்து லட்சம் ரிங்கிட் காப்புறுதிப் பணத்தை கோருவதற்காக தனது இடதுப்புற கண்ணை வேண்டுமென்றே சொந்தமாக காயப்படுத்திக்கொண்டதாக மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான நபர் ஒருவர் பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
52 வயது Tan Kok Guan என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் Siti Zulaikha Nordin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
ஒரு மாற்றுத் திறனாளியான அந்த நபர், போலீயான காப்பீட்டு கோரிக்கையை முன்வைத்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் தேதி காலை மணி 9 க்கும் மாலை மணி 6 க்கும் இடைப்பட்ட நேரத்தில் பட்டர்வொர்த், Kampung Paya, Jalan Kampung Gajah- வில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றத்தை மறுத்து விசாரணை கோரியதால் அந்த நபரை 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் அனுமதித்தார்.








