இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்றிரவு 9.45 மணியளவில், பாசீர் கூடாங், ஜாலான் மாசாய்-கொங் கொங் சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் டாக்டர் முகமட் ரொஸ்லான் முகமட் தஹீர் தெரிவித்தார்.
இந்த விபத்தில், கொங் கொங்கிலிருந்து மாசாயை நோக்கி, 23 வயதுடைய ஆடவர் செலுத்திய பெரோடுவா அக்சியா கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த புரோட்டோன் வாஜா காரை மோதியதில், பெரோடுவா அக்சியாவில் பயணித்த மாது ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக முகமட் ரொஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


