இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்றிரவு 9.45 மணியளவில், பாசீர் கூடாங், ஜாலான் மாசாய்-கொங் கொங் சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் டாக்டர் முகமட் ரொஸ்லான் முகமட் தஹீர் தெரிவித்தார்.
இந்த விபத்தில், கொங் கொங்கிலிருந்து மாசாயை நோக்கி, 23 வயதுடைய ஆடவர் செலுத்திய பெரோடுவா அக்சியா கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த புரோட்டோன் வாஜா காரை மோதியதில், பெரோடுவா அக்சியாவில் பயணித்த மாது ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக முகமட் ரொஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


