இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்றிரவு 9.45 மணியளவில், பாசீர் கூடாங், ஜாலான் மாசாய்-கொங் கொங் சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் டாக்டர் முகமட் ரொஸ்லான் முகமட் தஹீர் தெரிவித்தார்.
இந்த விபத்தில், கொங் கொங்கிலிருந்து மாசாயை நோக்கி, 23 வயதுடைய ஆடவர் செலுத்திய பெரோடுவா அக்சியா கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த புரோட்டோன் வாஜா காரை மோதியதில், பெரோடுவா அக்சியாவில் பயணித்த மாது ஒருவர் கடுங்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக முகமட் ரொஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


