May 26, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் எண்மர் உயிரிழந்தனர், சிபுவில் சம்பவம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் எண்மர் உயிரிழந்தனர், சிபுவில் சம்பவம்

Share:

சிபு, நவ. 22-

சரவாக், சிபு, சரிகாயிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பான் போர்னியோ ஜாலான் சரியாய் - சிபுசாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கோர சாலை விபத்தில் 7 அந்நிய நாட்டவர்கள் உட்பட எண்மர் உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் எண்மர் பயணம் செய்த பெரோடுவா அல்ஸா கார், எம்.பி.வி. 4 வீல் டிரைவ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த வேளையில் எம்.பி.வி. 4 வீல் டிரைவ் வாகன ஓட்டுநர், கடுங் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதில் பெரோடுவா அல்ஸா காரில் பயணம் செய்தவர்களின் இருவர் வெளியே தூக்கி வீசப்பட்ட வேளையில் அறுவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டனர்.

அந்த அறுவரின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் அதிகமான ஆள்பலத்தை பயன்படுத்தியதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு