Mar 9, 2026
Thisaigal NewsYouTube
கேமரான் மலை பயணத்தில் மாயமான 19 வயது இளைஞர் பெசுட் அருகே சடலமாக காணப்பட்டார்
தற்போதைய செய்திகள்

கேமரான் மலை பயணத்தில் மாயமான 19 வயது இளைஞர் பெசுட் அருகே சடலமாக காணப்பட்டார்

Share:

கேமரான் மலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 19 வயது இளைஞர், கம்போங் புக்கிட் ஜெருக் பகுதியில் உள்ள சாலையோர புதர் ஒன்றில் சடலமாக காணப்பட்டார்.

நேற்று மாலை 6.40 மணியளவில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது சடலமும், அதன் அருகே அவரது மோட்டார் சைக்கிளும், மீட்கப்பட்டதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் ரோசைம் அப் ரஹீம் தெரிவித்துள்ளார்.

கம்போங் பெட்டிங் லிந்தாங் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவில், வெள்ளிக்கிழமை அதிகாலை 1.38 மணியளவில், அந்த இளைஞர் வந்து போன காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதன் பின்னர், கேமரான் மலைக்குச் செல்லும் வழியில், அவரது மோட்டார் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞரின் பெற்றோர் கார் ஒன்றில் கேமரான் மலைக்குச் சென்ற நிலையில், அந்த இளைஞர் தனது மோட்டாரில் தனியாகப் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலமானது சவப்பரிசோதனைக்காக பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News

ஆசியா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

ஆசியா முழுவதும் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்பு: 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு

பேராசிரியர் சையத் முஹம்மது நாகிப் அல்-அத்தாஸ் மறைவிற்கு அன்வார் இரங்கல்

பேராசிரியர் சையத் முஹம்மது நாகிப் அல்-அத்தாஸ் மறைவிற்கு அன்வார் இரங்கல்

எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளானது மார்ச் 31-ல் வெளியீடு - கல்வி அமைச்சு அறிவிப்பு

எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளானது மார்ச் 31-ல் வெளியீடு - கல்வி அமைச்சு அறிவிப்பு

பயிற்சி மருத்துவர் மரணம்: கிளந்தான் சுகாதாரத் துறை விசாரணைக் குழுவை அமைத்தது

பயிற்சி மருத்துவர் மரணம்: கிளந்தான் சுகாதாரத் துறை விசாரணைக் குழுவை அமைத்தது

ஆலய விவகாரங்களை சுமூகமான முறையில் தீர்க்க சட்டக் குழுவை அமைத்தது இந்து சங்கம்

ஆலய விவகாரங்களை சுமூகமான முறையில் தீர்க்க சட்டக் குழுவை அமைத்தது இந்து சங்கம்

நயிமா அப்துல் காலிட் தொடுத்த வழக்கு: நீதிமன்றத்தில் பதிலளிக்க அரசு தயார் என பிரதமர் உறுதி

நயிமா அப்துல் காலிட் தொடுத்த வழக்கு: நீதிமன்றத்தில் பதிலளிக்க அரசு தயார் என பிரதமர் உறுதி