கேமரான் மலைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 19 வயது இளைஞர், கம்போங் புக்கிட் ஜெருக் பகுதியில் உள்ள சாலையோர புதர் ஒன்றில் சடலமாக காணப்பட்டார்.
நேற்று மாலை 6.40 மணியளவில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவரது சடலமும், அதன் அருகே அவரது மோட்டார் சைக்கிளும், மீட்கப்பட்டதாக பெசுட் மாவட்ட போலீஸ் தலைவர் ரோசைம் அப் ரஹீம் தெரிவித்துள்ளார்.
கம்போங் பெட்டிங் லிந்தாங் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவில், வெள்ளிக்கிழமை அதிகாலை 1.38 மணியளவில், அந்த இளைஞர் வந்து போன காட்சிகள் பதிவாகியுள்ளன.
அதன் பின்னர், கேமரான் மலைக்குச் செல்லும் வழியில், அவரது மோட்டார் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த இளைஞரின் பெற்றோர் கார் ஒன்றில் கேமரான் மலைக்குச் சென்ற நிலையில், அந்த இளைஞர் தனது மோட்டாரில் தனியாகப் பயணம் செய்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலமானது சவப்பரிசோதனைக்காக பெசுட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.








