Apr 11, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு
தற்போதைய செய்திகள்

எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

எரிபொருள் கடத்தல் மற்றும் கசிவைத் தடுக்கும் நோக்கில், அதிக ஆபத்துள்ள எரிபொருள் நிலையங்களில் போலீசாரை நிலைநிறுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஸான் முஹமட் அலி தெரிவித்தார்.

முதற்கட்டமாக 87 எரிபொருள் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு, அடுத்த வாரம் முதல் இரண்டாம் கட்டமாக மேலும் 70 நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

அமைச்சின் அமலாக்க அதிகாரிகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, போலீசாரின் உதவி கோரப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் நிலையங்களைக் கண்காணிக்க ரேலா தன்னார்வலர்களைப் பயன்படுத்துவது குறித்தும் உள்துறை அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related News

பாலஸ்தீனத்தில் 34 சட்டவிரோத குடியேற்றங்கள்: இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்

பாலஸ்தீனத்தில் 34 சட்டவிரோத குடியேற்றங்கள்: இஸ்ரேலுக்கு மலேசியா கடும் கண்டனம்

300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: 240 மில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையை கண்டறிந்தது எஸ்பிஆர்எம்

300 மில்லியன் ரிங்கிட் ஊழல்: 240 மில்லியன் ரிங்கிட் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையை கண்டறிந்தது எஸ்பிஆர்எம்

உலகளாவிய எரிபொருள்  நெருக்கடிக்கு மத்தியிலும் வீட்டு வசதித் திட்டங்கள் திட்டமிட்டபடி முடியும் - அமைச்சர் ஙா கோர் மிங் உறுதி

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் வீட்டு வசதித் திட்டங்கள் திட்டமிட்டபடி முடியும் - அமைச்சர் ஙா கோர் மிங் உறுதி

எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்

எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்

பத்துகேவ்ஸ் சிறார் இல்லத்தில் பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு

பத்துகேவ்ஸ் சிறார் இல்லத்தில் பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு

ஸ்கூடாய் பள்ளிக்கு வெளியே மோதல்: 2 பெண்கள், 13 சிறுவர்கள் கைது

ஸ்கூடாய் பள்ளிக்கு வெளியே மோதல்: 2 பெண்கள், 13 சிறுவர்கள் கைது