May 6, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி விடுதி இரகசியம்: மாணவர் மயக்கமடைந்த விவகாரத்தில் பரபரப்பு!
தற்போதைய செய்திகள்

பள்ளி விடுதி இரகசியம்: மாணவர் மயக்கமடைந்த விவகாரத்தில் பரபரப்பு!

Share:

சுங்கை பட்டாணி, நவம்பர்.30-

கோலா மூடா மாவட்ட காவற்படை, ஒரு பள்ளி விடுதியில் நடந்த மாணவர் துன்புறுத்தல் சம்பவம் குறித்த விசாரணையை முழுமையாக முடித்து விட்டது. இந்தச் சம்பவத்தில் ஒரு மாணவர் மயக்கமடைந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த 16 வயது மாணவன், தற்போது வாய்மொழி காவற்படை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான் என்று கோல மூடா, மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கைகள் அனைத்தும் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகப் சட்டத்துறைத் தலைவர் உத்தரவுக்காகக் காவற்படை காத்திருக்கிறது. விடுதியின் கழிவறையில் சக மாணவர்களால் தாக்கப்பட்டுக் கிடந்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே நான்கு மாணவர்கள் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்