Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக் காவலில் இருக்கும் 27,877 கைதிகள் நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர் - அஸாலினா தகவல்!
தற்போதைய செய்திகள்

தடுப்புக் காவலில் இருக்கும் 27,877 கைதிகள் நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர் - அஸாலினா தகவல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.0

நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் சுமார் 27,877 கைதிகள், தற்போது தடுப்புக் காவலில் உள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.

அவ்வழக்குகளைத் திறம்பட நிர்வகிக்க, மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் மூலம், நீதிபதிகளுக்கு அரசாங்கம் வழிகாட்டுவதாகவும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், தலைமைப் பதிவாளர் அலுவலகம் மற்றும் சிறை துறையின் தகவல்களின் படி, குற்றவியல் வழக்குகளுக்கான சராசரி காத்திருப்புக் காலம், 3 முதல் 24 மாதங்கள் வரை இருக்கும் என்றும் தனது எழுத்துப்பூர்வ பதிலில் அஸாலினா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டில், குற்றவியல் வழக்குகளை முடிக்க 12 மாத காலக் கெடுவை, தலைமை நீதிபதி நிர்ணயித்ததாகவும் அஸாலினா தெரிவித்துள்ளார்.

Related News

 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்