Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக் காவலில் இருக்கும் 27,877 கைதிகள் நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர் - அஸாலினா தகவல்!
தற்போதைய செய்திகள்

தடுப்புக் காவலில் இருக்கும் 27,877 கைதிகள் நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றனர் - அஸாலினா தகவல்!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.0

நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் சுமார் 27,877 கைதிகள், தற்போது தடுப்புக் காவலில் உள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.

அவ்வழக்குகளைத் திறம்பட நிர்வகிக்க, மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் மூலம், நீதிபதிகளுக்கு அரசாங்கம் வழிகாட்டுவதாகவும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அஸாலினா குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், தலைமைப் பதிவாளர் அலுவலகம் மற்றும் சிறை துறையின் தகவல்களின் படி, குற்றவியல் வழக்குகளுக்கான சராசரி காத்திருப்புக் காலம், 3 முதல் 24 மாதங்கள் வரை இருக்கும் என்றும் தனது எழுத்துப்பூர்வ பதிலில் அஸாலினா தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டில், குற்றவியல் வழக்குகளை முடிக்க 12 மாத காலக் கெடுவை, தலைமை நீதிபதி நிர்ணயித்ததாகவும் அஸாலினா தெரிவித்துள்ளார்.

Related News

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு