Aug 12, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சம் பெற்றதாக உயர் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

லஞ்சம் பெற்றதாக உயர் போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, மே.19-

தன்னுடைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும், அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கும் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்தததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், இன்று கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தில் பொது அமைதி மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரியான ஏஎஸ்பி. முகமட் பிஃர்டாவுஸ் முகமட் என்பவரே நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஆவார்.

40 வயதான ஏஎஸ்பி முகமட் பிஃர்டாவுஸ், மொத்தம் 13 ஆயிரத்து 500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவராக பணியாற்றிய காலத்தில், அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமில்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

2 மணி நேரம் முன்கூட்டியே பணிக்கு வருவதா? - அமைச்சர் தியாங் கிங் சிங்-க்கு விமானப் பணியாளர்கள் சங்கம் கடும் கண்டனம்