ஆழமான வெட்டுக்காயங்களுடன் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலம் கால்வாயில் தூக்கி எறியப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பேரா, பகான் டத்தோ, ருங்கூப், கம்போங் சுங்கை பாயூங் பாரு, ஜாலான் பாசீர் என்ற இடத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த ஆடவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஹீலீர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் அட்நான் பஸ்ரி தெரிவித்துள்ளார். பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து செம்பனைத் தோட்டத்தின் அருகில் அந்த சடலம் கண்டு மீட்கப்பட்டது. சவப்பரிசோதனைக்காக சடலம்,இபோ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


