ஆழமான வெட்டுக்காயங்களுடன் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலம் கால்வாயில் தூக்கி எறியப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பேரா, பகான் டத்தோ, ருங்கூப், கம்போங் சுங்கை பாயூங் பாரு, ஜாலான் பாசீர் என்ற இடத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த ஆடவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஹீலீர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் அட்நான் பஸ்ரி தெரிவித்துள்ளார். பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து செம்பனைத் தோட்டத்தின் அருகில் அந்த சடலம் கண்டு மீட்கப்பட்டது. சவப்பரிசோதனைக்காக சடலம்,இபோ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


