ஆழமான வெட்டுக்காயங்களுடன் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலம் கால்வாயில் தூக்கி எறியப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பேரா, பகான் டத்தோ, ருங்கூப், கம்போங் சுங்கை பாயூங் பாரு, ஜாலான் பாசீர் என்ற இடத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த ஆடவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஹீலீர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் அட்நான் பஸ்ரி தெரிவித்துள்ளார். பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து செம்பனைத் தோட்டத்தின் அருகில் அந்த சடலம் கண்டு மீட்கப்பட்டது. சவப்பரிசோதனைக்காக சடலம்,இபோ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


