ஆழமான வெட்டுக்காயங்களுடன் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, சடலம் கால்வாயில் தூக்கி எறியப்பட்டு கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பேரா, பகான் டத்தோ, ருங்கூப், கம்போங் சுங்கை பாயூங் பாரு, ஜாலான் பாசீர் என்ற இடத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த ஆடவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக ஹீலீர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் அட்நான் பஸ்ரி தெரிவித்துள்ளார். பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து செம்பனைத் தோட்டத்தின் அருகில் அந்த சடலம் கண்டு மீட்கப்பட்டது. சவப்பரிசோதனைக்காக சடலம்,இபோ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


