இன்று நாடாளுமன்றத்தின் 2024க்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொதுச் சேவைத் துறை ஊழியர்களுக்கு 2 ஆயிரம் வெள்ளி போனஸை அறிவித்திருந்தார் பிரதமர் அன்வார். மேலும், அந்தத் தொகை அடுத்த ஆண்டு பிப்பரவரி மாதம் ஒட்டு மொழ்த்தமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மகிழ்ச்சிகரமான செய்தியால் பொதுச் சேவௌத் துறை ஊழியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் அந்த அறிவிப்பிற்காகத் தாம் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நாட்டின் அரசாங்கத் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali குறிப்பிட்டார்..
வாழ்கைச் செலவினங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு பொதுச் சேவைத் துறை ஊழியர்களுக்கு பெரும் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் எனவர் அவர் சொன்னார்.







