Mar 23, 2026
Thisaigal NewsYouTube
2030 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு 4 பில்லியன் ரிங்கிட்டை எட்டலாம்
தற்போதைய செய்திகள்

2030 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு 4 பில்லியன் ரிங்கிட்டை எட்டலாம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் டயாலிசிஸ் சிகிச்சைக்கான செலவு ஆண்டுக்குக் குறைந்தது 4 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், மலேசியா கடுமையான சுகாதார நிதிச் சவால்களை எதிர்கொள்ளவிருக்கிறது என்று மேலவை உறுப்பினர் செனட்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 13 ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் லிங்கேஸ்வரன், டயாலிசிஸ் சிகிச்சையை மட்டுமே நம்பியிருப்பது நீண்ட காலத்திற்கு நிலையானது அல்ல என்றும் இது நாட்டின் சுகாதார நிதி ஒதுக்கீட்டைப் பாதிக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.

2016 ஆம் ஆண்டில், மலேசியா, இறுதி நிலை சிறுநீரக நோயாளிகளுக்கு 1.65 பில்லியன் ரிங்கிட்டைச் செலவிட்டுள்ளது. இந்த நிதியில் 94 விழுக்காடு அல்லது 1.55 பில்லியன் ரிங்கிட் டயாலிசிஸுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

மிகக் குறைந்த செலவாகவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வகை செய்யும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆறு விழுக்காடு தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

டயாலிசிஸ் தேவைப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது ஒவ்வோர் ஆண்டும் 9,000 முதல் 10,000 வரை எட்டுகிறது. வெளிப்படையாக, ஆண்டுக்கு சுமார் எட்டு முதல் ஒன்பது விழுக்காடு மருத்துவ பணவீக்கத்துடன் சேர்ந்து, சிகிச்சைக்கான செலவு நாட்டின் சுகாதார பட்ஜெட்டின் வளர்ச்சியை விட வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் அச்சம் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு