பெர்லிஸ் மாநிலம்,கோலா பெர்லிஸ் அருகே உள்ள கம்பங் செபெராங் அலோர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் முற்றிலும் எரிந்து நாசமாகின.
அதிகாலை 3.38 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக பெர்லிஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ஹாமிசி வான் முகமது ஜின் தெரிவித்துள்ளார்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கங்கார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்களுடன், சிம்பாங் எம்பாட், பாடாங் பெசார், கோலா பெர்லிஸ் மற்றும் பாவ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வ தீயணைப்பு படையினரும் இணைந்து போராடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வீரர்களின் விரைவான நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








