2025-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையை உள்ளடக்கிய தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை 2-ஐ மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பெற்றுக் கொண்டார்.
இன்று செப்டம்பர் 8-ஆம் தேதி இஸ்தானா புக்கிட் துங்குவில் நடைபெற்ற சந்திப்பின் போது, தலைமைக் கணக்காய்வாளர் டத்தோ ஶ்ரீ வான் சுராயா வான் முஹமட் ரட்ஸி இந்த அறிக்கையை மாமன்னரிடம் சமர்ப்பித்தார்.
இதனுடன் மத்திய அரசின் அமைச்சுகள் மற்றும் துறைகளின் செயல்பாடுகள், மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள், மாநில அமைச்சுகள் மற்றும் துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகளும் மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
நாட்டின் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பில் மாமன்னர் தொடர்ந்து அக்கறை கொண்டுள்ள நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை அவர் ஆய்வு செய்ததாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








