பேராக், கெடா மற்றும் பினாங்கில் கடந்த ஜூன் மாதம் முதல் 14 கொள்ளை மற்றும் கார் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் ‘கேங் மான் கூடா’ கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
24 முதல் 49 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் மற்றும் ஒரு பெண், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தைப்பிங் மற்றும் கூலிம் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ஆறு திருடப்பட்ட கார்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்தக் கும்பலால் சுமார் 2 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கை மூலம் 9 கார் திருட்டு வழக்குகள், 2 கொள்ளை வழக்குகள், 3 வாகனங்களில் இருந்து பொருட்கள் திருடப்பட்ட வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கும்பலுடன் தொடர்புடைய மூன்று ஆண் சந்தேக நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.








