வரும் ஹரிராயாவை முன்னிட்டு கூடுதலாக ஒரு நாள் பொது விடுமுறை வழங்கப்பட்டு இருப்பது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், பேர் வாங்கி கொள்வதற்காக இதனை வழங்கவில்லை என்று துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் விளக்கம் அளித்துள்ளார்.
அதேவேளையில் தனியார் துறைக்கு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று அவர் விளக்கினார்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக ஹரிராயா பெருநாளை தூரத்தில் உள்ள உறவினர்களுடன் குதூகலமாக கொண்டாட இயலாமல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் இருந்த வேளையில் இந்த முறை பெருநாளை ஒரு பெருவிழாவாக மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடி மகிழ வேண்டும் என்ற நோக்கிலேயே கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமாட் மஸ்லான் தெளிவுபடுத்தினார்.

Related News

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு


