அரசாங்க துணை பப்ளிக் பிராசிகியுட்டர் டத்தோ அந்தோணி கெவின் மொரைஸ் கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவரான டாக்டர் ஆர். குணசேகரன் உட்பட அறுவர் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை வரும் நவம்பர் 7 ஆம் தேதி புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் குணசேகரனின் வழக்கறிஞர் ஜாஸ்மின் சியோங் இதனை தெரிவித்தார். கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தங்களுக்கு எதிராக விதித்த மரண தண்டனையை எதிர்த்து 59 வயது டாக்டர் குணசேகரன், 51 வயது ரவிசந்திரன், 30 வயது ஆர்.டினேஸ்வரன், 29 வயது எ.கே தினேஷ் குமார், 32 வயது எம். விஸ்வநாத் மற்றும் 29 வயது எஸ்.நிமலன் ஆகிய அறுவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


