Mar 16, 2026
Thisaigal NewsYouTube
போலிடெக்னிக் மாணவர் வாடகை வீட்டில் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

போலிடெக்னிக் மாணவர் வாடகை வீட்டில் இறந்து கிடந்தார்

Share:

ஜாசின், டிசம்பர்,05-

போலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர், தாம் தங்கியிருந்த வாடகை வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று மதியம் 12 மணியளவில் அந்த மாணவர், மலாக்கா, தாமான் மெர்லிமாவ் எமாஸில் உள்ள வாடகை வீட்டின் கட்டிலில் இறந்து கிடந்தது குறித்து போலீசர் தகவல் பெற்றதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ ரோபர்ட் தெரிவித்தார்.

அவ்விடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அந்த மாணவரைச் சோதனை செய்த போது, அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர். 19 வயது முகமட் ஸுல் ஹாகிமி என்ற அந்த மாணவர், வாடகை வீட்டில் இதர 13 மாணவர்களுடன் தங்கிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

மாணவரின் மரணத்தில் குற்றத்தன்மைக்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று அவர் விளக்கினார்.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி