Jul 24, 2026
Thisaigal NewsYouTube
போர் பதற்றம் எதிரொலி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா மீண்டும் ஃபார்முலா ஒன் போட்டியை நடத்த வாய்ப்பு?
தற்போதைய செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா மீண்டும் ஃபார்முலா ஒன் போட்டியை நடத்த வாய்ப்பு?

Share:

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதலால், இந்த ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பந்தயத் தொடரின் ஒரு சுற்றுப் போட்டியை மலேசியா நடத்தும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கனவே போர் சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா பந்தயங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், வரும் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள கத்தார் கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் ஆகிய போட்டிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்றாக அக்டோபர் 4-ஆம் தேதி ஒரு சுற்றுப் போட்டியை நடத்த மலேசியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் முக்கிய விருப்பத் தேர்வுகளாக பரிசீலிக்கப்படுகின்றன.

மலேசியாவின் செபாங் பன்னாட்டு சுற்றுவட்டம் கடந்த 1999 முதல் 2017 வரை ஃபார்முலா ஒன் மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. பின்னர், செலவுகள் அதிகரிப்பு, உரிமக் கட்டணங்கள் காரணமாக போட்டி அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டது.

தற்போது சூழ்நிலை சாதகமாக அமைந்தால், சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஃபார்முலா ஒன் மீண்டும் மலேசியாவுக்கு திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Related News

ஆயுதமேந்திய கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்பு / வினோத் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆயுதமேந்திய கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்களில் தொடர்பு / வினோத் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

2,000 மீத்தேன் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு: ஸ்ரீ கம்பாங்கான் மொத்த சந்தையில் பயங்கர தீ

2,000 மீத்தேன் சிலிண்டர்கள் வெடித்து பரபரப்பு: ஸ்ரீ கம்பாங்கான் மொத்த சந்தையில் பயங்கர தீ

இந்திய சமூக மேம்பாட்டில் கல்வி, திறன் வளர்ச்சிக்கு முன்னுரிமை - அன்வார் இப்ராகிம் வலியுறுத்து

இந்திய சமூக மேம்பாட்டில் கல்வி, திறன் வளர்ச்சிக்கு முன்னுரிமை - அன்வார் இப்ராகிம் வலியுறுத்து

9 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட பினாங்கு மாநில அருங்காட்சியகம்

9 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட பினாங்கு மாநில அருங்காட்சியகம்

கிள்ளான் கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் தப்பிய சந்தேகநபர் கைது

கிள்ளான் கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் தப்பிய சந்தேகநபர் கைது

ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் துணைப் போலீஸ் படைத்தலைவர் அயோப் கான்

ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் துணைப் போலீஸ் படைத்தலைவர் அயோப் கான்